ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமத்தின் வழியாக - ஆதியாகமம் 1:1
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் வேதாகமத்தின் வழியாக
புத்தகம் : ஆதியாகமம்
பகுதி : ஆதியாகமம் 1:1
நிகழ்ச்சி : #0013

வாசியுங்கள்

TTB  0013 – ஆதியாகமம் 1B

பிரியமானவர்களே மீண்டும் இந்த ஊடகத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த நிகழ்ச்சி முதல் ஆதியாகமம் முதலாம் அதிகாரம் முதல் வசனத்தை நாம் படித்து கொண்டிருக்கிறோம். ஒரு முறை கூட அந்த வசனத்தை வாசிக்கிறேன்.

ஆதியாகமம் 1:1
[1] ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
……………..
அண்ட சராசரங்களையும் அல்லது இந்த பிரபஞ்சத்தையே தேவன் படைத்தார் என்பதை மிகச் சுருக்கமான வார்த்தைகளிலே பரிசுத்த வேதம் நமக்கு சொல்கிறது.
மேல்நாடு ஒன்றில் பள்ளி பாடப்புத்தகத்தில் இந்த சத்தியத்தை சேர்த்து, கல்வி கற்கும் அனைவரும் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால் எத்தனை ஆசிரியர்கள், உண்மையான நம்பிக்கையோடு, இதை போதித்தார்கள் என்பது கேள்விக்குறியே. இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பை குறித்து பல ஊகங்கள் பல கால கட்டங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

தேவன் உலகத்தை படைத்தார் என்ற உண்மையை குறித்து, உலகத்தில் பலர் கூறும், பல காரியங்களை நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நமது காலத்தில் வாழும், பெரும்பாலும் இளைஞர்களால் ஆன ஒரு குழு இறையியலாளர்கள் , இறையியல் பரிணாமவாதம் எனும் ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கோட்பாட்டை குறித்து , science ponders religion என்ற புத்தகத்தில் கிர்ட்லி மாதர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ஒரு இறையியலாளர், இறையியல் பரிணாம வாதத்தை கடவுள் படைக்கும் முறையாக பயன்படுத்தினார் என்பதை ஏற்றுக் கொண்டால், அவர் அதோடு முழுமையாக செல்ல தயாராக இருக்க வேண்டும். அதுவே ஒழுங்கான செயல்முறை மட்டுமல்ல, அது தொடர்ந்து நடக்கும் ஒன்று. மனிதனுக்கான பொற்காலம் என்று ஒன்று இருக்கும் என்றால் அது கடந்த காலத்தில் அல்ல அது எதிர்காலத்தில் இருக்கிறது. மேலும், பரிணாமத்தின் படைப்பு செயல் முறையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட எந்த தலையீடும் இருக்கக் கூடாது. உயிருள்ள முதல் செல்கள் முன்பிருந்த உயிரற்ற பொருட்களிலிருந்து தோன்றியது, அது திடீரென உண்டான தீர்க்கமான அதிகரிப்பாக இருக்கலாம், ஆனால் முன்னேற்ற பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட வளர்ச்சி அல்ல. அப்படி என்றால் அது முற்றிலும் இயற்கையான வளர்ச்சியே- என்று எழுதி இருக்கிறார்.

இறையியல் பரிணாம வாதம் என்பது எல்லா கோட்பாடுகளிலும் மிகவும் யதார்த்தமற்றது. அதாவது கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நம்பிக்கை அது, என்று சொல்லலாம். ஆம் பிரியமானவர்களே, சிலர் முயலோடும் நாய் கூட்டத்தோடும் ஒரே நேரத்தில் ஓட முயற்சி செய்கிறார்கள். அவிசுவாசிகளோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். அதே நேரத்தில் வேத புத்தகத்தையும் சுமந்து செல்ல விரும்புகிறார்கள். இந்த இரண்டு காரியங்களையும் ஒரே நேரத்தில் செய்வது கடினமானது. முன்னொரு காலத்தில், கிரேக்கர்கள் ஒரு பந்தயம் நடத்தினார்கள். இரண்டு குதிரைகள் நிற்கும், ஒரு மனிதன் இரண்டு குதிரைகள் மேலும் ஒவ்வொரு கால்களை வைத்து நின்றுகொண்டு, குதிரைகளை ஓட்டிச் செல்ல வேண்டும். இரண்டு குதிரைகளும் ஒரே பாதையில் செல்லும் வரை அது அற்புதமாக இருக்கும், ஆனால் அதில் ஒரு குதிரை வேறு திசையில் செல்ல முடிவு செய்தால், அதன் மேலே நின்று சவாரி செய்பவர் எந்த குதிரையோடு செல்வது என முடிவு செய்ய வேண்டும். இறையியல் பரிணாம கொள்கையின் மேல் நம்பிக்கை வைப்பவர்களுடைய நிலைமையும் இதுதான். பொதுவாக முடிவில் அவன் தவறான குதிரையை தெரிந்தெடுத்து ஏறி விடுகிறான். இன்றைக்கு நம்முடைய காலத்தில் வாழும் அறிவுள்ள சில மனிதர்களின் மனதிலும் எத்தனையோ தவறான தகவல்கள் நிரம்பி இருக்கின்றன. உதாரணமாக பல வருடங்களுக்கு முன் ஒரு மத சார்பற்ற இதழில் வெளியான கட்டுரை ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலையும் கொடுத்திருக்கிறது. நன்றாக கவனியுங்கள். வேத புத்தகத்தின் பதிவுகளின் படி உலகம் படைக்கப்பட்ட தேதி என்ன?? … இதுதான் கேள்வி. – அதற்கு அவர்களே சொல்லியிருக்கிற பதில் – கிறிஸ்துவுக்கு முன் 4004 ஆம் ஆண்டு என்பதுதான். இது எத்தனை அபத்தமான ஒரு காரியம் இல்லையா?. மேலும்
Life என்ற ஒரு பத்திரிக்கையில் – உயிரின் தோற்றம் பற்றிய ஒரு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஏதோ ஒரு குறிப்பிடப்படாத காலகட்டத்தில், ஆழமான தண்ணீரின் மேற்பரப்பில் உயிர் அற்புதமாக தோன்றியது என்று கூறப்பட்டிருந்தது . இது 200 கோடி வருடங்களுக்கு முன் என்று சிலரும், 150 கோடி ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது என்று சிலரும் சொல்லுகிறார்கள். அது எந்த வடிவத்தில் இருந்தது என்பதை விஞ்ஞானம் குறிப்பிட முடியாது. இந்த கட்டுரையின்படி சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று, ஏதோ ஒரு செயல்பாட்டால் சில பெரிய மூலக்கூறுகள் தம்மைத்தாமே நகலெடுக்கும் திறனை பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம். அன்பானவர்களே பெரிய மூலக்கூறுகள் தம்மைத்தாமே நகலெடுக்கும் திறனை பெற்றென என்ற கோட்பாட்டை நீங்கள் ஒத்துக்கொள்ள முடியுமா? யோசித்துப் பாருங்கள்.

உலகம் உண்டானதை குறித்து இன்னும் சில அபத்தமான கோட்பாடுகளும் இருக்கின்றன. பண்டை காலத்தில் அறிவுத்திறன் கொண்ட ஏதோ ஒரு பிரஜை இங்கே விட்டுச் சென்ற குப்பையில் இருந்து மனிதன் தோன்றினான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இன்னும் சிலர் நாம் மரத்திலிருந்து உண்டானவர்கள் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் கடல் பாசியில் இருந்து நாம் தானாய் உண்டானதாய் சொல்லுகிறார்கள். இன்னும் சிலர் நமது மூதாதையர்களை குப்பைத் தொட்டியில் பார்க்கச் சொல்கிறார்கள். இது எத்தனை கேவலமாய் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கவனித்தீர்களா?. உங்களைப் பொறுத்தவரை மனிதன் எப்படி தோன்றினான் என்பது எனக்கு தெரியாது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்த நவீன உலகத்திலும் தேவனே வானத்தையும் பூமியையும் மனிதனையும் உண்டாக்கினார் என்னும் அறிக்கை இன்னும் நிலைத்து நிற்கிறது.

ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் கொடுத்த பிரபலமான பரிணாம கொள்கை இப்படி சொல்கிறது.
ஒரு பொருளின் ஒருங்கிணைப்பும் அதே நேரத்தில் இயக்கத்தின் சிதறலும் ஒத்திசைவற்ற நிலையில் இருந்து தெளிவான ஒத்திசைவான நிலைக்கு மாறுகிறது. அதே நேரத்தில் தக்க வைக்கப்பட்ட இயக்கமும், அதே போன்ற மாற்றத்திற்கு உட்படுகிறது என்று எழுதியிருக்கிறார். இதில் எதையாவது நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று, நமக்கு அர்த்தமுள்ளதாக தெரியும் ஒரே காரியம் ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதுதான். இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்??- தேவனே. – அவர் அதை ஒன்றும் இல்லாமையிலிருந்து உண்டாக்கினார். எப்பொழுது?? எனக்குத் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது. சிலர் 100 கோடி வருடங்களுக்கு முன் என்று சொல்லுகிறார்கள். சிலர் 200 கோடி வருடங்களுக்கு முன் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் 500 கோடி வருடங்களுக்கு முன்பு என்று சொல்லுகிறார்கள். நம்முடைய தனிப்பட்ட கருத்தின் படி அவர்கள் எல்லாரும் சிறிய எண்களையே சொல்லுகிறார்கள். அதைவிட மிக மிக முன்னதாகவே தேவன் இந்த உலகத்தை படைத்திருப்பார் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். அருமையானவர்களே கடவுளுக்கு பின்னால் நித்திய காலம் இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கடந்த கோடி கோடி வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?? நம்மை வரவேற்க காத்திருந்தாரா?? இல்லை. அவர் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இந்த படைப்பை அவர் நீண்ட காலமாக வைத்திருந்து செயல்பட்டு வருகிறார். அவர் நமக்கு அதிகம் சொல்லவில்லை, இல்லையா? பூமியில் உள்ள சிறிய மனிதன் உண்மையில் தனக்கு தெரியாதவற்றை, தெரிந்தவன் போல பெருமை பாராட்டுவதே அகந்தை.

நாம் புத்தகங்களின் யுகத்தில் வாழ்கிறோம். அவை அச்சகத்திலிருந்து எப்போதும் அதிகரித்து வரும் எண்ணிக்கையில் நமக்காகப் பொழிகின்றன. நாம் எப்போதும் கையேடுகள், பாடப்புத்தகங்கள், கட்டுரைகள், பக்திப் புத்தகங்கள், விமர்சனப் புத்தகங்கள் ஆகியவற்றைப் படிக்கிறோம், வேதாகமத்தைப் பற்றிய புத்தகங்கள், சுவிசேஷங்களைப் பற்றிய புத்தகங்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கப்படுகின்றன. ஆனால் சுவிசேஷங்களை ஆராய்வதற்கு நாம் எவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் கொடுக்கிறோம்? நவீன காலத்து சத்திய அறிக்கைகளைப் படிப்பதன் மூலம் நாம் விரைவாக நன்மையைப் பெறுகிறோம் என்று கற்பனை செய்ய நாம் தொடர்ந்து தூண்டப்படுகிறோம், அதை நாம் ஏற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிதானது, ஏனெனில் அது நமது கல்வி அல்லது ஓரளவு தொடர்புகளால் நமக்கு அறிமுகமான ஒரு வடிவத்திலும் கண்ணோட்டத்திலும் நமக்கு வழங்கப்படுகிறது. ஆனால் நாம் எளிதாகப் பெறும் நன்மை நமது இருப்புக்குள் ஆழமாக நுழைந்து ஒரு நிலையான சொத்தாக மாறுவதில்லை. வெற்றி பெறாமல் எதையும் பெற முடியாது என்பதை நாம் மிக எளிமையாக உணர்ந்தால் நன்றாக இருக்கும். இயற்கையின் மாபெரும் உண்மைகள் அவற்றைப் புரிந்துகொள்வதை எளிதாக்கும் வகையில் நமக்கு வழங்கப்படவில்லை. கிருபையின் பொக்கிஷங்கள், நல்ல முத்துக்களைத் தேடும் ஒரு மனிதனின் சிறப்பியல்பு கொண்ட அனைத்துத் திறமையுடனும் ஆற்றலுடனும் தேடப்பட வேண்டும்.

இப்போது நான் அந்த அறிக்கையை விரும்புகிறேன், ஏனென்றால் தேவனுடைய வார்த்தையைப் பற்றிய இந்த ஆய்வை நாம் தொடங்கும்போது, இது வெறும் பொழுதுபோக்கு அல்ல, நாங்கள் விளம்பரம் செய்யவில்லை என்பதை இது நமக்கு வெளிப்படுத்துகிறது. நண்பர்களே, நாங்கள் உண்மையில் உங்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் போதிக்க முயற்சிக்கிறோம். நாங்கள் பரபரப்பான விஷயங்களைக் கையாளவில்லை. நிச்சயமாக, வேதாகமம் எனக்கு ஒரு பரபரப்பான புத்தகம், மேலும் பரபரப்பான பல விஷயங்களை நாங்கள் கையாளுவோம், ஆனால் தேவனுடைய வார்த்தையில் நாம் அதை அப்படியே கையாளப் போகிறோம் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவ்வளவுதான். ஆனால் இது வேறு எந்தப் புத்தகமும் பேசாத வகையில் நம் இருதயங்களுடன் பேசும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறிது நேரத்திற்கு முன்பு நாம் குறிப்பிட்டது போல, ஆதியாகமப் புத்தகத்தில் பல விஷயங்களின் ஆரம்பம் உங்களிடம் உள்ளது: சிருஷ்டிப்பு, ஆண், பெண், பாவம், ஓய்வுநாள், திருமணம், குடும்பம், உழைப்பு, நாகரிகம், கலாச்சாரம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், பாஷைகள், மற்றும் மீட்பு மற்றும் நகரங்கள். இன்று நாம் ஒரு பெரிய நகர்ப்புறப் பிரச்சனையை எதிர்கொள்கிறோம். சரி, நாம் இங்கே ஆதியாகமத்திற்குத் திரும்பிச் சென்று நகரங்களின் ஆரம்பத்தைப் பார்ப்பதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

ஆதியாகம புத்தகத்தின் முக்கிய பிரிவுகள்

TTB  0013 – ஆதியாகமம் 1B:

பிரியமானவர்களே மீண்டும் இந்த ஊடகத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த நிகழ்ச்சி முதல் ஆதியாகமம் முதலாம் அதிகாரம் முதல் வசனத்தை நாம்  படித்து கொண்டிருக்கிறோம். ஒரு முறை கூட அந்த வசனத்தை வாசிக்கிறேன். 

ஆதியாகமம் 1:1 

[1] ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

……………..

அண்ட சராசரங்களையும் அல்லது இந்த பிரபஞ்சத்தையே தேவன் படைத்தார் என்பதை மிகச் சுருக்கமான வார்த்தைகளிலே பரிசுத்த வேதம் நமக்கு சொல்கிறது.

மேல்நாடு ஒன்றில் பள்ளி பாடப்புத்தகத்தில் இந்த சத்தியத்தை சேர்த்து, கல்வி கற்கும் அனைவரும் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது.  ஆனால் எத்தனை ஆசிரியர்கள், உண்மையான நம்பிக்கையோடு, இதை போதித்தார்கள் என்பது கேள்விக்குறியே. இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பை குறித்து பல ஊகங்கள் பல கால கட்டங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

தேவன் உலகத்தை படைத்தார் என்ற உண்மையை குறித்து, உலகத்தில் பலர் கூறும், பல காரியங்களை நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நமது காலத்தில் வாழும், பெரும்பாலும் இளைஞர்களால் ஆன ஒரு குழு இறையியலாளர்கள் , இறையியல் பரிணாமவாதம் எனும் ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கோட்பாட்டை குறித்து , science ponders religion என்ற புத்தகத்தில் கிர்ட்லி மாதர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ஒரு இறையியலாளர், இறையியல் பரிணாம வாதத்தை கடவுள் படைக்கும் முறையாக பயன்படுத்தினார் என்பதை ஏற்றுக் கொண்டால், அவர் அதோடு முழுமையாக செல்ல தயாராக இருக்க வேண்டும். அதுவே ஒழுங்கான செயல்முறை மட்டுமல்ல, அது தொடர்ந்து நடக்கும் ஒன்று. மனிதனுக்கான பொற்காலம் என்று ஒன்று இருக்கும் என்றால்   அது கடந்த காலத்தில் அல்ல அது எதிர்காலத்தில் இருக்கிறது.   மேலும், பரிணாமத்தின் படைப்பு செயல் முறையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட எந்த தலையீடும் இருக்கக் கூடாது. உயிருள்ள முதல் செல்கள் முன்பிருந்த உயிரற்ற பொருட்களிலிருந்து தோன்றியது, அது திடீரென உண்டான தீர்க்கமான அதிகரிப்பாக இருக்கலாம், ஆனால் முன்னேற்ற பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட வளர்ச்சி அல்ல. அப்படி என்றால் அது முற்றிலும் இயற்கையான வளர்ச்சியே- என்று எழுதி இருக்கிறார்.

இறையியல் பரிணாம வாதம் என்பது எல்லா கோட்பாடுகளிலும் மிகவும் யதார்த்தமற்றது. அதாவது கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நம்பிக்கை அது, என்று சொல்லலாம். ஆம் பிரியமானவர்களே,  சிலர்  முயலோடும் நாய் கூட்டத்தோடும் ஒரே நேரத்தில் ஓட முயற்சி செய்கிறார்கள். அவிசுவாசிகளோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். அதே நேரத்தில் வேத புத்தகத்தையும் சுமந்து செல்ல விரும்புகிறார்கள். இந்த இரண்டு காரியங்களையும் ஒரே நேரத்தில் செய்வது கடினமானது.  முன்னொரு காலத்தில், கிரேக்கர்கள் ஒரு பந்தயம் நடத்தினார்கள். இரண்டு குதிரைகள் நிற்கும், ஒரு மனிதன் இரண்டு குதிரைகள் மேலும் ஒவ்வொரு கால்களை வைத்து நின்றுகொண்டு, குதிரைகளை ஓட்டிச் செல்ல வேண்டும். இரண்டு குதிரைகளும் ஒரே பாதையில் செல்லும் வரை அது அற்புதமாக இருக்கும், ஆனால் அதில் ஒரு குதிரை வேறு திசையில் செல்ல முடிவு செய்தால், அதன் மேலே நின்று சவாரி செய்பவர் எந்த குதிரையோடு செல்வது என முடிவு செய்ய வேண்டும். இறையியல் பரிணாம கொள்கையின் மேல் நம்பிக்கை  வைப்பவர்களுடைய நிலைமையும் இதுதான். பொதுவாக முடிவில் அவன் தவறான குதிரையை தெரிந்தெடுத்து ஏறி விடுகிறான். இன்றைக்கு  நம்முடைய காலத்தில் வாழும் அறிவுள்ள சில மனிதர்களின் மனதிலும் எத்தனையோ தவறான தகவல்கள் நிரம்பி இருக்கின்றன. உதாரணமாக பல வருடங்களுக்கு முன் ஒரு மத சார்பற்ற இதழில் வெளியான கட்டுரை ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலையும் கொடுத்திருக்கிறது.   நன்றாக கவனியுங்கள். வேத புத்தகத்தின் பதிவுகளின் படி உலகம் படைக்கப்பட்ட தேதி என்ன?? … இதுதான் கேள்வி. –  அதற்கு அவர்களே சொல்லியிருக்கிற பதில் – கிறிஸ்துவுக்கு முன் 4004 ஆம் ஆண்டு என்பதுதான். இது எத்தனை அபத்தமான ஒரு காரியம் இல்லையா?. மேலும்

Life  என்ற ஒரு பத்திரிக்கையில் – உயிரின் தோற்றம்  பற்றிய ஒரு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஏதோ ஒரு குறிப்பிடப்படாத காலகட்டத்தில், ஆழமான தண்ணீரின் மேற்பரப்பில் உயிர் அற்புதமாக தோன்றியது என்று கூறப்பட்டிருந்தது . இது 200 கோடி வருடங்களுக்கு முன் என்று சிலரும், 150 கோடி ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது என்று சிலரும் சொல்லுகிறார்கள். அது எந்த வடிவத்தில் இருந்தது என்பதை விஞ்ஞானம் குறிப்பிட முடியாது. இந்த கட்டுரையின்படி சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று, ஏதோ ஒரு செயல்பாட்டால் சில பெரிய மூலக்கூறுகள் தம்மைத்தாமே நகலெடுக்கும் திறனை பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம். அன்பானவர்களே பெரிய மூலக்கூறுகள் தம்மைத்தாமே நகலெடுக்கும் திறனை பெற்றென என்ற கோட்பாட்டை நீங்கள் ஒத்துக்கொள்ள முடியுமா? யோசித்துப் பாருங்கள். 

உலகம் உண்டானதை குறித்து இன்னும் சில அபத்தமான கோட்பாடுகளும் இருக்கின்றன.  பண்டை காலத்தில் அறிவுத்திறன் கொண்ட ஏதோ ஒரு பிரஜை இங்கே விட்டுச் சென்ற குப்பையில் இருந்து மனிதன் தோன்றினான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இன்னும் சிலர் நாம் மரத்திலிருந்து உண்டானவர்கள் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் கடல் பாசியில் இருந்து நாம் தானாய் உண்டானதாய் சொல்லுகிறார்கள். இன்னும் சிலர் நமது மூதாதையர்களை குப்பைத் தொட்டியில் பார்க்கச் சொல்கிறார்கள். இது எத்தனை கேவலமாய் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கவனித்தீர்களா?. உங்களைப் பொறுத்தவரை மனிதன் எப்படி தோன்றினான் என்பது எனக்கு தெரியாது என்று நீங்கள் சொல்லலாம்.  ஆனால் இந்த நவீன உலகத்திலும் தேவனே வானத்தையும் பூமியையும் மனிதனையும் உண்டாக்கினார் என்னும் அறிக்கை இன்னும் நிலைத்து நிற்கிறது. 

ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் கொடுத்த பிரபலமான பரிணாம கொள்கை  இப்படி சொல்கிறது. 

ஒரு பொருளின் ஒருங்கிணைப்பும் அதே நேரத்தில் இயக்கத்தின் சிதறலும் ஒத்திசைவற்ற நிலையில்  இருந்து தெளிவான ஒத்திசைவான நிலைக்கு மாறுகிறது. அதே நேரத்தில் தக்க வைக்கப்பட்ட இயக்கமும், அதே போன்ற மாற்றத்திற்கு உட்படுகிறது என்று எழுதியிருக்கிறார். இதில் எதையாவது நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று, நமக்கு அர்த்தமுள்ளதாக தெரியும் ஒரே காரியம் ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதுதான். இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்??- தேவனே. – அவர் அதை ஒன்றும் இல்லாமையிலிருந்து உண்டாக்கினார். எப்பொழுது?? எனக்குத் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது. சிலர் 100 கோடி வருடங்களுக்கு முன் என்று சொல்லுகிறார்கள். சிலர் 200 கோடி வருடங்களுக்கு முன் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர்  500 கோடி வருடங்களுக்கு முன்பு என்று சொல்லுகிறார்கள். நம்முடைய தனிப்பட்ட கருத்தின் படி அவர்கள் எல்லாரும் சிறிய எண்களையே சொல்லுகிறார்கள். அதைவிட மிக மிக முன்னதாகவே தேவன் இந்த உலகத்தை படைத்திருப்பார் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். அருமையானவர்களே கடவுளுக்கு பின்னால் நித்திய காலம் இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கடந்த கோடி கோடி வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?? நம்மை வரவேற்க காத்திருந்தாரா?? இல்லை. அவர் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இந்த படைப்பை அவர் நீண்ட காலமாக வைத்திருந்து செயல்பட்டு வருகிறார்.  அவர் நமக்கு அதிகம் சொல்லவில்லை, இல்லையா? பூமியில் உள்ள சிறிய மனிதன் உண்மையில் தனக்கு தெரியாதவற்றை, தெரிந்தவன் போல பெருமை பாராட்டுவதே அகந்தை. 

Sherman Nagal  என்பவர் எழுதிய ஒரு கவிதையை கவனியுங்கள்…….

நீ ஒரு நட்சத்திரத்தை இயக்க முடியாது 

ஒரு காட்டு இலையை வடிவமைக்க முடியாது 

ஒரு மலையை உயர்த்தவோ, ஆள் கடலை மூழ்கடிக்கவோ முடியாது 

நம்பிக்கையற்ற அகந்தை நிறைந்த சிறிய மனிதனே 

ஒரு அழகான காலைப் பொழுதை உண்டாக்க முடியாது 

பகலை நிழல் தரும் மாலையாக மாற்ற முடியாது. 

வெளிரிப்போன நிலவை மென்மையான ஒளியோடு அனுப்ப முடியாது. 

இவை அனைத்தையும் செய்த ஒருவரை நீ எப்படி சந்தேகிக்கலாம். ….//

எத்தனை அருமையான ஒரு பாடல் இல்லையா??

எனவே அன்பானவர்களே வேத வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற அந்த மாட்சிமை மிக்க அறிக்கையை நாம் ஏற்றுக் கொள்வது பொருத்தமானது. ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.. சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும் வானங்களை நோக்கி பார்க்க வேண்டும் அவருடைய விரல்களின் கிரியையை, அவர் நியமித்திருக்கிற நிலவையும், நட்சத்திரங்களையும், நோக்கி பார்க்க வேண்டும். 

கவனியுங்கள் வாசிக்கிறேன். 

சங்கீதம் 8:3 

[3] உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,…..

……………..

    மற்றும் ஒரு வசனம் வாசிக்கிறேன்.

சங்கீதம் 19 : 1 

[1] வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

………………..

இது மட்டுமல்ல அப்போஸ்தலானாகிய பவுல் ரோமாபுரியில் உள்ள திருச்சபைக்கு எழுதிய கடிதத்தில் இருந்து ஒரு வசனத்தை பார்ப்போம். 

ரோமர் 1:20 

[20] எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

……………….

இந்த வசனத்தோடு கூட எபிரெயர் நிருபத்தை எழுதியவர்  என்ன சொல்கிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 

எபிரெயர் 11:3 

[3] விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

………………

தேவனுடைய படைப்பை விசுவாசத்தினாலே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒன்றுமில்லாமையில் இருந்து ஏதோ ஒன்றை உண்டாக்குவது எப்படி என்பதை விஞ்ஞானம் கூட சொல்ல முடியாது. கடவுள் ஒருவரே அதை அப்படியே செய்தார். இன்றைய மனிதனாலும் இது எப்பொழுது படைக்கப்பட்டது என்று சொல்ல முடியவில்லை. 

ஆதியாகம புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற படைப்பை குறித்த சரித்திரத்தை மற்ற கதைகளோடு ஒப்பிடும் பொழுது நாம் பார்க்கும் வித்தியாசங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. பெரும்பாலான  தேசங்களில் அந்தந்த தேசத்திற்கான உலக படைப்பை குறித்த புராணம் இருக்கிறது. இவை அனைத்துமே ஆதியாகமத்தின் சிதைந்த வடிவங்களாக இருக்கலாம். உதாரணமாக மத சார்பற்ற ஒரு தேசத்தின் சிறந்த பதிவு பாபிலோனிய படைப்பு. பாபிலோனில் கண்டெடுக்கப்பட்ட களிமண்  ஓடுகளில் இருந்து இது நமக்குத் தெரிய வருகிறது. பாபிலோனிய களிமண்  ஓடுகளின்படி உலகம் குழப்பத்தோடு தொடங்குகிறது. 

ஆனால் வேத வசனத்தின் பதிவுபடி அது ஒரு ஒழுங்கோடு, ஒரு பூரணத்தோடு தொடங்குகிறது. ஆம்

ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பாபிலோனிய பதிவின்படி வானத்தில் உள்ள பொருட்கள் தெய்வங்கள். ஆனால் வேத வசனத்தின்படி அவை வெறும் பொருள்தான். பாபிலோனிய காலங்களில் பல தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் வேத வசனத்தில் ஒரே தேவன் என்பதுதான் உண்மை. பாபிலோனியம் பிரபஞ்சத்தை ஒரு தச்சனின் வேலையாக சொல்கிறது. வேத வசனமோ – தேவன் உண்டாகக்கடவது என்றார், எனவே அது உண்டாயிற்று என்று சொல்கிறது. பாபிலோனிய பதிவு குழந்தைத்தனத்தினாலும், வினோதத்தாலும் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் வேத வசனத்தில் பரிசுத்தரும் நம்மை இரட்சிக்கிறவருமான தேவனின் மாட்சிமிக்க படைப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது.. பாபிலோனிய எழுத்துக்கள் அறியப்பட்ட விஞ்ஞானத்தோடு முரண்படுகிறது. வேத வசனம் உண்மை விஞ்ஞானத்தோடு இசைவாக இருக்கிறது. 

பிரியமானவர்களே ஒரு விசுவாசி பரிணாம வாதத்தை நிராகரிப்பான். ஏனென்றால், அது தேவனையே நிராகரிக்கிறது / வெளிப்படுத்துதலை நிராகரிக்கிறது, மனிதனின் வீழ்ச்சியையும் பாவத்தின் உண்மையையும் அது மறுக்கிறது. கிறிஸ்துவின் கன்னி பிறப்பை அது எதிர்க்கிறது.  எனவே நாமும் அதை முழு இருதயத்தோடும் நிராகரிக்கலாம்.

நன்றாக  கவனியுங்கள், பரிணாம வாதம் நுழைய முடியாத அல்லது தீர்க்க முடியாத மூன்று முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. 

முதலாவதாக ஒன்றுமில்லாமல் இருந்து தானாக மற்றும் ஒன்றுக்கு செல்வது என்பதற்கான விளக்கம் அங்கே இல்லை.. 

இரண்டாவதாக ஏதோ ஒன்றில் இருந்து தானாக உயிர் உண்டானது என்பது

. மூன்றாவதாக அந்த உயிரிலிருந்து – சுய உணர்வுள்ள சுதந்திர சித்தமுடைய  மனிதன் உருவானது. எனவே பரிணாம கொள்கையை நாம்  ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுவாக பத்திரிகைகள் எப்பொழுதும் உணர்ச்சி சார்ந்த செய்திகளை தேடுகின்றன. 

ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தியைச் சொல்கிறேன் கவனியுங்கள். டெக்ஸஸ் என்ற இடத்தில், டைனோசர்களின் பாதங்களை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. பொதுவாக டெக்சஸில் எல்லாமே பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். டைனோசர்கள் அங்கே இருந்தன என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொழுது, குழப்பத்தை கொடுக்கும் மற்றும் ஒரு காரியத்தையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது அதே இடத்தில் பெரிய மனித பாதங்களும் இருக்கின்றனவாம். நீரின் மேற்பரப்பில் சிறிய அமீபாவிலோ அல்லது ஒரு நுரையிலோ தொடங்கி டைனோசர்கள் மட்டுமல்ல, இன்று வாழும் நம்மையும் விட மிகப்பெரிய மனிதர்கள் உண்டானார்கள் என்று சொல்வது கடினம். பரிணாம வாதத்திற்கு, அடுத்த சில வருடங்களில் அனேக பிரச்சனைகள் வரும். ஒரு விஞ்ஞானியின் முன்னறிவிப்பை மட்டும்  சொல்கிறேன் – இந்த நூற்றாண்டு முடிவதற்குள் பரிமாண வாத கோட்பாடு இல்லாத ஒரு பறவை போல முற்றிலும் அழிந்து விடும். என்று கூறி இருக்கிறார்.

இப்படிப்பட்ட காரியங்களை குறித்து இன்னும் பல காரியங்களை நாம் சொல்லலாம். ஆனால் மூன்றாவது ஒரு கேள்வி எழும்புகிறது.. இந்த பிரபஞ்சத்தை யார் படைத்தது? இது எப்பொழுது படைக்கப்பட்டது?என்பவைகளைத் தாண்டி.  ஏன் படைக்கப்பட்டது ?   என்ற கேள்வி எழும்புகிறது. பிரியமானவர்களே இது மிக முக்கியமான அடிப்படையான ஒரு கேள்வி. 

வேத வசனம் என்ன சொல்லுகிறது இந்தப் பிரபஞ்சம் தேவனுடைய சொந்த மகிழ்ச்சிக்காக படைக்கப்பட்டது. அவரே இதை படைக்க விரும்பினார். இதில் அவர் பிரியமாய் இருந்தார். வேத புத்தகத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் நான்கு 11ல் இது மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கவனியுங்கள் வாசிக்கிறேன். 

வெளிப்படுத்தின விசேஷம் 4:11 

[11] கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

…………………

தேவன் இந்த பிரபஞ்சத்தை விரும்பினதால் இதைப் படைத்தார். இதை அவர் தமது மகிழ்ச்சிக்காகவே செய்திருக்கிறார். உங்களுக்கு ஒரு வேளை இந்த பிரபஞ்சம் விருப்பம் இல்லாத ஒன்றாக தெரியலாம். ஆனால் அவருக்கு இதில் விருப்பம் உண்டு. இந்த சிறிய பூமி உருண்டையை நான் எங்கே வைக்க வேண்டும் என்று அவர் நம்மிடத்தில் கேட்கவில்லை. நீங்கள் பிறந்து வளர்ந்து இப்பொழுது இருக்கும் இடத்தில் உங்களை வைக்க வேண்டும் என்று நீங்கள் அவரிடத்தில் கேட்கவில்லை. இங்கே உன்னை வைக்கலாமா? என்று அவரும் உங்களிடத்தில் கேட்கவில்லை. நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சம் தேவனுடைய மகிழ்ச்சிக்காக படைக்கப்பட்டது அவரே இதை படைக்க விரும்பினார். படைப்பில் அவர் பிரியமாய் இருந்தார். 

இரண்டாவது காரணம் அவர் தனது சொந்த மகிமைக்காக இதை படைத்தார்….. ஆதியில் அவருடைய படைப்பு அவரை பாடி மகிழ்ந்தது பாருங்கள் வாசிக்கிறேன். 

யோபு 38:7 

[7] அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

………………..

இது எப்பொழுது உண்டானது? தேவன் அண்ட சராசரங்களையும் உருவாக்கிய பொழுது இது நடைபெற்றது. 

வேத வசனம் மற்றும் ஒரு உண்மையையும் சொல்கிறது.

பாருங்கள்  – ஏசாயா 43:7 

[7] நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.

………………….

 மனிதனை இந்த பிரபஞ்சத்தில் தேவன் தம்மோடு ஐக்கியமாய் வாழ்வதற்காக படைத்தார். மனிதனோடு ஐக்கியமாக இருக்க தேவன் விரும்பினார். அதனால், அவனை சுதந்திர நெறிமுறை மனிதனாக உண்டாக்கினார். கடவுள் ஒரு கூட்டம் ரோபோக்களை உண்டாக்கி இருக்கலாம். பொத்தானை அழுத்தினால் தொழுது கொள்ளும் இயந்திர மனிதர்களை உருவாக்கி இருக்கலாம். ஆனால் கடவுளுக்கு அப்படிப்பட்ட மனிதர்கள் தேவையில்லை. சுதந்திரமாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரைத் தேர்ந்தெடுத்து, அவரிடத்தில் அன்பு செலுத்தி, அவருக்கு பணிவிடை செய்யும் மனிதனையே அவர் விரும்பினார். 

அருமையான சகோதரனே சகோதரியே, இன்று நம்மை சுற்றி இருக்கிற நம்பிக்கையின்மை, தேவதூஷணம், கடவுளுக்கு எதிரான பகைமை, இவைகள் எல்லாம் நிறைந்த இந்த உலகத்தில் ஒரு மனிதனாக, மனுஷியாக நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியம் என்ன தெரியுமா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பகிரங்கமாக தெரிந்தெடுத்து அவரை பின்பற்றுவதுதான். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின பிதாவாகிய சர்வ வல்லமை உள்ள தேவனை விசுவாசிப்பது மட்டுமல்ல, அவருடைய ஒரே பேரான குமாரனான இயேசு கிறிஸ்துவை – உங்கள் பாவத்திற்காக மரித்த உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்வதே முக்கியம்.

 இதுவே நமக்குள்ள மிக மகிமையான ஒரு பாக்கியம். 

பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று எல்லா சுதந்திரங்களை பற்றியும் சத்தமாக பேசும் இந்த ஏழை மனிதர்கள் கூட்டம் உண்மையான சுதந்திரம் என்னவென்று அறியாததாய் இருக்கிறது.  இயேசு கிறிஸ்துவை இரட்சகராக தேர்ந்தெடுக்கும் பொழுதுதான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது. 

சரி இப்பொழுது ஆதியாகமத்தின் முதல் வசனத்திற்கு நாம் திரும்பி வருவோம் ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். .இது மாட்சி மிக்க ஒரு வசனம். அபரிமிதமான ஒரு வசனம். வேத புத்தகத்தின் உள்ளே நாம் கடந்து செல்ல வேண்டிய வாசல் இதுவே. தேவனே உலகத்தை படைத்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஏன் தெரியுமா? பாருங்கள் 

எபிரெயர் 11:6 

[6] விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

…….…………

ஆதியாகமம் முதலாம் அதிகாரம் முதலாம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற ஆதியிலே என்ற வார்த்தையை நாம் கவனிக்க வேண்டும் . ஆதியிலே என்று நாம் சொல்லும் பொழுது

 தேதி குறிப்பிடப்பட முடியாத அந்த ஆரம்ப நாள். பல கோடி வருடங்களுக்கு முன்பு, என்று நீங்கள் சொன்னால் அது சரி. ஆனால் எத்தனை கோடி வருடங்களுக்கு முன்பு என்று நீங்கள் கணக்கிட முடியாது. நிச்சயமாக மனிதனுக்கு அது தெரியாது. இது காலத்தின் தொடக்கம், நேரத்தின் முதல் தருணம். அதற்கு முன்பு எதுவுமே இல்லை. பொருளும் இல்லை, காலமும் இல்லை, வெறும் “ஒன்றுமில்லாமை” மட்டுமே.  எல்லாம் தொடங்கிய இடம் இதுவே.

தேவன் – இங்கே “தேவன்” என்று சொல்லப்படுவது எபிரெய மொழியில் “எலோஹிம்” (Elohim) என்ற பன்மை வடிவப் பெயர் வருகிறது. ஆனால் வினைச்சொல் “சிருஷ்டித்தார்” என்பது ஒருமையில் இருக்கிறது. ஒரே கடவுள் – ஆனால் அவருக்குள் பன்மைத்தன்மை இருக்கிறது என்பதை மறைமுகமாகக் காட்டுகிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்திற்கு முதல் சுட்டிக்காட்டல்.

சிருஷ்டித்தார் – அடுத்ததாக அந்த முதலாம் வசனத்தில் சிருஷ்டித்தார் என்ற வார்த்தை பார்க்கிறோம். சிருஷ்டி என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிற எபிரேய வார்த்தை பாரா(Bara) என்பதாகும். அதாவது ஒன்றும் இல்லாமையிலிருந்து உருவாகுதல். ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் இந்த குறிப்பிட்ட வார்த்தை மூன்று முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அங்கே மூன்று சிருஷ்டிப்பின் செயல்கள் மட்டுமே  நடைபெற்றன. 

  1. ஒன்றுமில்லாமல் இருந்து – பொருளை அதாவது வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
  2. எல்லா ஜீவஜந்துகளையும் சிருஷ்டித்தார்.
  3. தேவன் மனுஷனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார் என்று ஆதியாகமம் 1:27 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.

இது கடவுளின் எல்லையற்ற வல்லமையைக் காட்டுகிறது.

சிருஷ்டிப்பில் நடைபெற்ற காரியங்களுக்கு இறையியல் பரிணாம வாதம் பதில் சொல்ல முடியாது. அந்த கோட்பாட்டின் படி மனிதன் படைக்கப்படும் வரை எல்லாவற்றையும் தேவன் உண்டாக்கினார் என்றும், பின் ஆதாமையும் ஏவாளையும்  பரிணாமத்தின் விளைவாகவே கருதுகிறது. ஆதியாகமத்தின் நாட்களை நீண்ட காலகட்டங்கள் என்று சொல்கிறது. ஆனால் அதை நாம் நம்ப முடியாது.  சாயங்காலமும் விடியற்காலமும் ஆகி முதலாம் நாள் ஆயிற்று என்று நாம் வாசிப்பது 24 மணி நேர நாளையே குறிக்கிறது.

தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து, பூமி மற்ற படைப்புகளில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 அது ஏனென்றால் பூமிதான் மனிதனின் சொந்த இருப்பிடம். அவன் இங்கு தான் வைக்கப்பட்டிருக்கிறான். நாம் அவனைப் பற்றி ஆர்வமாக இருக்கிறோம். ஏனென்றால் நாமும் அதே ஜீவனை சேர்ந்தவர்கள்தான் அருமையான சகோதரனை, சகோதரியே, நீங்களும் நானும் தேவனுடைய சிருஷ்டிப்புகள். நாம் அவருடைய ஜீவன்கள்  என்பதை நாம் உணர வேண்டும். அவருடைய ஜீவன்களாக அவருக்கு நாம் ஏதோ ஒன்றைச் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். 

“வானத்தையும் பூமியையும்” –  

  • வானம் = விண்வெளி, நட்சத்திரங்கள், பால்வீதிகள் எல்லாம்
  • பூமி = இந்த பூமி, கடல்கள், மலைகள், உயிரினங்கள் எல்லாம்
  • அதாவது “பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே” என்பதற்கு சுருக்கமான வெளிப்பாடு.

இந்த ஒரு வசனத்திலேயே சொல்லப்படும் மிக முக்கியமான உண்மைகள்:

  • கடவுளுக்கு முன்பு எதுவும் இல்லை – அவரே தொடக்கம்.
  • எல்லாம் தானாக உண்டானது அல்ல; ஒரு தனிப்பட்ட, வல்லமையுள்ள கடவுளால் படைக்கப்பட்டது.
  • பிரபஞ்சம் தற்செயலாக வரவில்லை; ஒரு திட்டத்தோடும் நோக்கத்தோடும் உண்டாக்கப்பட்டது.
  • கடவுள் பொருளல்ல (பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அல்ல); அவர் பொருளுக்கு அப்பாற்பட்டவர், எல்லாவற்றையும் படைத்தவர்.

ஒரு வசனத்தில் பைபிள் முழுவதற்கும் அஸ்திபாரம் போட்டுவிடுகிறது:
“எல்லாம் கடவுளிடமிருந்து வந்தது; அவரல்லாத எதுவும் தானாக உண்டாகவில்லை.”

பல ஆண்டுகளுக்கு முன் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.. – அறியப்படாதவற்றின் வெளிப்பாடுகள் மீண்டும் பிரிக்கப்படும். மிகப் பொதுவான காரியங்கள், காலம்  – வெளி –  பொருள் – சக்தி –  இயக்கம், இவைகள் தான் அவை..

. ஜார்ஜ் டூயி என்ற ஊழியர் ஒருவர் ஒரு ராணுவ சார்ஜண்டிடம் கிறிஸ்துவை குறித்து சாட்சி சொல்ல முயன்றார்.. உடனே அந்த சார்ஜன்ட்  – ஸ்பென்சர் குறிப்பிட்ட காரியங்களை எடுத்துச் சொன்னார் உடனே ஜார்ஜ் டூயி வேத புத்தகமும் ஸ்பென்ஸ்சரும் படைப்பின் மகத்துவமான கொள்கையை ஒரே மாதிரி போதிக்கிறார்கள் தெரியுமா? என்று கூறினார். அதற்கு சார்ஜன்ட் ஆச்சரியப்பட்டு, அப்படியா?? அது எப்படி என்று கேட்டார். உடனே ஊழியர்,  ஸ்பென்சர்- காலம் – வெளி – பொருள் – சக்தி – இயக்கம் – பற்றி பேசினார். ஆம் ஆதியாகமம் முதல் இரண்டு வசனங்களிலும் ஆதியில்- என்று காலத்தை குறித்தும் /  வானத்தை – என்று அண்டவெளியை குறித்தும், பூமியையும் – என்று பொருளையும் சிருஷ்டித்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும்

 பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது பூமியின் மேல் இருள் இருந்தது தேவனுடைய ஆவி அதாவது சக்தி ஜலத்தின் மேலே இயக்கத்தை உண்டு பண்ணியது, அதாவது அசைவாடினது என்று பார்க்கிறோம். ஸ்பென்சருக்கு இந்த உண்மையை கண்டுபிடிக்க 50 ஆண்டுகள் பிடித்தது.  ஆனால் வேத புத்தகத்தில் வாசிக்கும் பொழுது 50 வினாடிகளில் இதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார். இவ்வாறு கூறிய பொழுது அந்த சார்ஜன்ட் எதைக் குறித்தும் வாக்குவாதம் செய்ய முடியவில்லை. சீக்கிரமாக அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். 

கவனித்தீர்களா?? தேவன் ஆதியாகமத்தின் முதல் இரண்டு வசனங்களிலேயே இந்த மகத்துவமான கொள்கைகளை வைத்திருப்பது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. எனவே இதை நாம் கட்டாயம் தெளிவாய் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். 

பிரியமானவர்களே வேத  புத்தகத்தின் இந்த முதல் வசனத்தை நீங்கள் பூரணமாய் விசுவாசிக்க முடியும் என்றால்,  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களுக்கான தண்டனையை சிலுவையில் சுமந்தார் என்பதையும் உங்களால் விசுவாசிக்க முடியும்.  அப்படி நீங்கள் விசுவாசம் வைக்கும் பொழுது நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வீர்கள். தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவீர்கள் அப்படிப்பட்ட ஒரு மா பெரும் பாக்கியத்தை இந்த சத்தத்தை கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top