ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 34:1- 34
நிகழ்ச்சி எண்: 0052
வாசியுங்கள்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக இன்று நாம் ஆதியாகமம் 34 ஆம் அதிகாரம் முதல் வசனம் முதல் கற்றுக் கொள்ளப் போகிறோம்.
யாக்கோபு சாலேம் (Shalem) என்ற இடத்தில் தங்கி, நகரத்திற்கு வெளியே ஒரு நல்ல இடத்தையும் வாங்கினார். அன்றைய கலாச்சாரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள அவர் முயற்சி செய்கிறார். ஆனால், அது ஒரு நல்ல இடமாக இருக்கவில்லை. எனவே, தேவன் அவரை அந்த இடத்திலிருந்து பிரிக்க விரும்புகிறார். உண்மையைச் சொல்லப்போனால், இந்த அதிகாரத்தை நீங்கள் படித்து முடிக்கும்போது, தேவன் அவரை அங்கிருந்து பிரித்ததுதான் நல்லது என்ற முடிவுக்கு நீங்களே வருவீர்கள்.
ஆதியாகமம் 34:1
‘1லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள். ‘
………………..
யாக்கோபின் குடும்பம் நகரத்திற்கு வெளியே தங்கி இருந்தாலும், இப்பொழுது தீனாள் பட்டினத்திற்கு உள்ளே சென்று அங்கே இருக்கும் பெண்களை பார்க்க போகிறாள்.
ஆதியாகமம் 34:2
‘2அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான். ‘
………………………
இன்றைய ஊடகங்களின் மொழியில் சொன்னால்: சீகேம் தீனாளை பாலியல் வன்கொடுமை செய்தான். செய்தித்தாள்களிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் அவர்களால் இதைச் சொல்ல முடியும் என்றால், ஒரு சாதாரணப் பிரசங்கியான என்னாலும் நிச்சயமாக இதைச் சொல்ல முடியும். பாவம் என்பது வெளிப்படையாகச் சொல்லப்பட வேண்டும்.
ஒரு காலத்தில் பாவம் என்பது பாவமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று, “sin” என்ற ஆங்கில சொல்லில் உள்ள “s” என்ற எழுத்தை நீக்கிவிட்டு, நீங்கள் பாவம் செய்தால்தான் சமூகத்தில் ஒரு முக்கியமான (“in”) குழுவில் இருக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் தேவன் பாவத்தை அப்படிப் பார்ப்பதில்லை; அவர் இன்றும் பாவத்தை பாவம் என்றுதான் அழைக்கிறார். கவனியுங்கள், (“SIN”) என்ற அந்த ஆங்கிலச் சொல்லின் நடுவில் “I” (நான்) என்ற எழுத்து இருக்கிறது—அதாவது நாம் அனைவருமே அந்தப் பாவத்தின் நடுவில் தான் இருக்கிறோம்.
ஆதியாகமம் 34:3-4
‘3அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான். 4சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான். ‘
……………………..
இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சீகேம் (Shechem) என்ற அந்த இளைஞன் உண்மையாகவே அந்தப் பெண்ணை நேசித்திருக்கிறான்; அவளைத் திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டிருக்கிறான்.
ஆதியாகமம் 34:5-7
‘5தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான். 6அத்தருணத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடே பேசும்படி அவனிடத்தில் வந்தான். 7யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள். ‘
……………………..
நிச்சயமாகவே, அங்கே நடந்தது தவறானது என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அது நடந்துவிட்டது; இப்போது அந்த இளைஞன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். யாக்கோபு இதைக் கேள்விப்பட்டபோது, தன் மகன்களின் வருகைக்காகக் காத்திருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு போர்க்கால ஆலோசனை (War counsel) நடத்தினார்கள்.
தனிப்பட்ட ரீதியில், யாக்கோபு இந்த விஷயத்தை இவ்வளவு தூரம் பெரிதுபடுத்தியிருக்கக் கூடாது என்று சிலர் சொல்லலாம். சீகேமின் தந்தை ஏமோர் (Hamor), யாக்கோபைப் பார்க்க வந்தபோது, தன் மகனுக்காக அந்தப் பெண்ணைக் கேட்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த நேரத்தில் அதுதான் ஒரு சிறந்த தீர்வாக இருந்திருக்கும் என்பதால், யாக்கோபு அதற்குச் சம்மதித்திருக்கலாம். எப்படியாயினும், இந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் எந்த வகையிலும் சரியானதல்ல, தேவனும் அதை அங்கீகரிக்கவில்லை.
ஆதியாகமம் 34:8-9
‘8ஏமோர் அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள். 9நீங்கள் எங்களோடே சம்பந்தங்கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு, ‘
………………………
அந்நியர்களுடன் திருமண உறவு கொள்வது (Intermarriage) தவறானது என்றாலும், தீனாளை சீகேமுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படிச் செய்திருந்தால், அதைவிட மோசமான ஒரு பாவம் நடப்பதைத் தடுத்திருக்க முடியும்.
அதாவது, ஞாயிற்றுக்கிழமை ஒரு விளையாட்டு முடிந்து திங்கட்கிழமை காலை அதன் தவறுகளைப் பற்றிப் பேசுபவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல நிச்சயமாக, இதுவும் நடந்த பிறகு நாம் சொல்லும் ஒரு கருத்துதான்.
ஆதியாகமம் 34:10-12
’10எங்களோடே வாசம்பண்ணுங்கள்; தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது; இதிலே குடியிருந்து, வியாபாரம்பண்ணி, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டு கொண்டிருங்கள் என்றான். 11சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரனையும் நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்க வேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்; 12பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான். ‘
……………………
இவை அனைத்தும் ஒன்றை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன: யாக்கோபு இங்கிருந்து கிளம்பியே ஆக வேண்டும். இந்தப் தேசத்து மக்களுடன் கலந்து வாழ்வது அவருக்கு ஏற்ற இடமல்ல.
ஆதியாகமம் 34:13
’13அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக: ‘
……………………..
நிச்சயமாக, யாக்கோபு தன் குடும்பத்தில் ஒரு தலைவராக (Leadership) முன்நின்று செயல்பட்டிருக்க வேண்டும் என்று நாமும் உணருகிறோம். முதலாவதாக, தன் மகன்கள் சீகேமையும் ஏமோரையும் வஞ்சகமாக ஏமாற்றுவதை அவர் தடுத்திருக்க வேண்டும்.
ஆதியாகமம் 34:14
’14விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும். ‘
……………………
இந்தச் சம்பவத்தில் என்னை மிகவும் வருத்தமடையச் செய்யும் விஷயம் என்னவென்றால்: இங்கே நடந்த உண்மையான கொடூரம்—அதாவது அந்தப் பாலியல் வன்கொடுமை (rape) என்ற பாவம்—முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, விருத்தசேதனம் செய்யாதவர்களுடன் திருமண உறவு கொள்ளக் கூடாது என்று தேவன் கொடுத்திருந்த ஒரு சட்டத்தை (rule) முன்வைத்து, அவர்கள் இந்தப் பிரச்சினையை அணுகியதுதான் வேதனைக்குரியது.
ஆதியாகமம் 34:15-17
’15நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப்போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து, 16உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம். 17விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள். ‘
………………………
யாக்கோபின் மகன்கள் அவர்களைச் செய்யச் சொன்னது, ‘விருத்தசேதனம்’ (circumcision) என்ற அந்தச் சடங்கைத்தான்.
இது இன்று பலருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதகர் ஒருவர் தன் அனுபவத்தை இவ்வாறு எழுதி இருக்கிறார். அவரிடத்தில் ஆலோசனனைக்காக வந்த இருவரில் அந்த இளைஞன் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்பதால், அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க அவர் மறுத்துவிட்டார். அந்தப் பெண்ணோ, அவன் ஒரு கிறிஸ்தவனாக மாறினால் ஒழிய அவனைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதியாகக் கூறினாள். போதகர் அந்த இளைஞனிடம் பேசினார், அவனும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னான். நாங்கள் ஜெபம் செய்தோம், பிறகு அவனிடம், “உண்மையாகவே நீ என்ன செய்திருக்கிறாய் (உன் மனதில் என்ன மாற்றம் ஏற்பட்டது)?” என்று கேட்டேன். அதற்கு அவன் கொடுத்த மழுப்பலான பதில்களைப் போல அவர் இதுவரை எதையும் கேட்டதில்லை.
உண்மையைச் சொல்லப்போனால், அந்தப் பெண்ணின் முன்னாலேயே அந்த போதகர் : “பெண்ணே, நான் இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க மாட்டேன். இந்த இளைஞன் மனம் மாறியிருப்பதாக (Converted) நான் நினைக்கவில்லை.” என்று கூறினார். அவர் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதாக அவர்கள் நினைத்தார்கள். உடனே வேறொரு போதகரிடம் சென்று திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் அவனை சபைக்கு அழைக்க முயன்றாள். நான் அவனிடம் “கடுமையாக” நடந்துகொண்டதால், என்னுடைய பிரசங்கத்தைக் கேட்க வராததற்கு அவனிடம் ஒரு நல்ல காரணம் இருந்தது. அதனால் அவள் வேறொரு சபைக்குச் செல்ல சம்மதித்தாள். அங்கு இரண்டு மூன்று முறை சென்றார்கள். இறுதியில் அவன் அவளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டான்: “உண்மையில், நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல.”
சபையில் சேரும் சடங்குகளைச் செய்வதோ அல்லது கிறிஸ்துவை நம்புகிறேன் என்று வாய்வார்த்தையாகச் சொல்வதோ நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தமாகாது. இன்று பலருக்கு ‘விசுவாசம்’ என்பது ஒரு பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. வெறும் தலையை ஆட்டிச் சம்மதிப்பதே போதும் என்று நினைக்கிறார்கள். என் சத்தத்தை கேட்டுக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நம்புவது என்பது ஒரு மகத்தான அனுபவம். இந்த உலகத்தில் அதற்கு இணையாக எதுவுமே இல்லை. நீங்கள் கிறிஸ்துவை நம்பும்போது, அது உங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், அந்த இளைஞனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
பிரசித்தி பெற்ற சிலருடைய வாழ்க்கையிலும் விசுவாசிகள் அவிசுவாசிகளோடு இணைக்கப்படும் பொழுது அவர்கள் வேதனையான குடும்ப வாழ்க்கையே வாழ்கிறார்கள் .
யாக்கோபின் மகன்கள் இங்கே என்ன சொல்கிறார்கள் என்றால், “நீங்கள் விருத்தசேதனம் என்ற சடங்கை மட்டும் செய்து கொண்டால் போதும், எல்லாம் சரியாகிவிடும்” என்கிறார்கள்.
இன்று அநேகர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒரு சபையில் சேர்ந்துவிடுவது, தலையை ஆட்டிச் சம்மதிப்பது, சரியான மத வார்த்தைகளைப் பயன்படுத்துவது மற்றும் சரியான வேத வசனங்களை மேற்கோள் காட்டுவது—இவை அனைத்தும் ஒருவரை கிறிஸ்தவராக மாற்றிவிடும் என்று கருதுகிறார்கள். அருமையானவர்களே, அது நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதைக் குறிக்காது. நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவை நம்பியிருந்தால், உங்களுக்குள் ஏதோ ஒன்று நடந்திருக்கும்; நீங்கள் ஒரு முற்றிலும் மாற்றப்பட்ட மனிதராக (different person) இருப்பீர்கள்.
ஆதியாகமம் 34:18-19
’18அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் குமாரனாகிய சீகேமுக்கும் நலமாய்த் தோன்றினது. 19அந்த வாலிபன் யாக்கோபுடைய குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான். ‘
………………….
ஆமாம், இந்தச் சூழ்நிலையில் அந்த இளைஞன் (சீகேம்) கௌரவமான ஒரு காரியத்தையே செய்கிறான் என்று நாம் சொல்லலாம்.
ஆதியாகமம் 34:20-23
’20ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி: 21இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம். 22அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள். 23அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள். ‘
………………………
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தத் திருமண உறவுகள் (Intermarriage) மூலமாக, காலப்போக்கில் யாக்கோபிடம் இருந்த அனைத்தையும் தாங்களே சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்று அந்த மனிதர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆதியாகமம் 34:24
’24அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும், அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். ‘
………………………….
விசுவாசம் இல்லாதவர்களுக்கு விருத்தசேதனம் (rite of circumcision) என்ற சடங்கைச் செய்வது என்பது மிகப்பெரிய ஒரு போலித்தனம். இது ஒருவன் உண்மையான மனமாற்றம் (unconverted) அடையாமல், ஒரு சபையில் உறுப்பினராகச் சேருவதற்குச் சமமானது.
ஆதியாகமம் 34:25
’25மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின் மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். ‘
…………………..
இது ஒரு மிகப்பெரிய வஞ்சகம். சிமியோனும் லேவியும் தீனாளின் உடன் பிறந்த சகோதரர்கள் தான் ( அவர்களின் தாய், தந்தை இருவருமே ஒன்றுதான்), அவர்கள் பழிவாங்கத் துடித்தார்கள். ஆனால், அந்தப் பழிவாங்கலில் அவர்கள் எல்லை மீறிப் போய்விட்டார்கள்.
அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியோ அல்லது யாக்கோபு ஆரானில் (Haran) கஷ்டப்பட்டு சேர்த்த பெரும் செல்வத்தை ஏமோர் அபகரிக்க நினைத்ததோ—இவை எதுவுமே சிமியோனும் லேவியும் செய்த அந்த கொடூரமான செயலை நியாயப்படுத்தாது. ஆனால், அதே சமயம் அந்த தேசத்து மக்களுடன் சுமூகமாக வாழ்வது எவ்வளவு கடினமான காரியம் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. அவர்கள் செய்த காரியம் மிகவும் பயங்கரமானது.
ஆதியாகமம் 34:26-27
’26ஏமோரையும், அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். 27மேலும், யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு, ‘
…………………….
யாக்கோபின் மற்ற மகன்களும் இந்தச் செயலில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். இது யாக்கோபின் குடும்பத்தில் இருந்த பேராசையை (greed) வெளிப்படுத்துகிறது. இது முற்றிலும் தவறானது; இந்தப் பேராசை குணம் அவர்களுக்கு எங்கே இருந்து வந்தது என்றால், அவர்கள் லாபானின் (Laban) வீட்டில் வளர்ந்தபோது அவரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான்.
ஆதியாகமம் 34:28-30
’28அவர்களுடைய ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும், 29அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள். 30அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான். ‘
………………….
யாக்கோபின் வாழ்க்கையில் இங்கே ஒரு தெளிவான தவறு இருப்பதை கவனியுங்கள். சிமியோனும் லேவியும் தனக்கு கெட்ட பெயரை (bad name) உண்டாக்கிவிட்டார்கள் என்பதற்காகவே யாக்கோபு அவர்களைக் கண்டிக்கிறார்; ஆனால் அவர்கள் செய்த அந்தப் பயங்கரமான பாவத்திற்காக அவர் அவர்களைக் கண்டிக்கவில்லை.
சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிற சிலரும் பாவத்தைப் பற்றியும், அவர்களின் செயல்களைப் பற்றியும் தவறான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய செயல் அவர்களைச் சுற்றி உள்ளவர்களிடம் என்ன விளைவை (effect) ஏற்படுத்தும் என்பதைப் பற்றி மட்டுமே நாம் கவலைப்படுகிறார்கள்
பிடிக்காத எதற்கும் ஆதரவாக நிற்கத் துணிவில்லாமல் இருக்கிறார்கள். இங்கே விஷயம் எது சரி அல்லது எது தவறு என்பது அல்ல; மாறாக, அந்தக் கூட்டத்திடம் தாங்கள் எப்படி நற்பெயர் எடுப்பது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது.
தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்பவர்கள் மீதும், தங்கள் நடத்தை மற்றவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மீதும் தேவன் இரக்கம் காட்டுவாராக! இது சரியான காரியமா??, ஒரு கிறிஸ்தவப் பண்பா?? அல்லது ஒரு தேவபிள்ளையாக இதைச் செய்யலாமா வேண்டாமா என்று அவர்கள் சிந்திப்பதில்லை.
இதனால்தான் நம்முடைய சபைகள் சமரசம் (compromise) செய்துகொள்பவர்களால் நிறைந்திருக்கின்றன. இன்று அநேக கிறிஸ்தவர்கள் விரக்தியிலும், மகிழ்ச்சியின்றியும் இருப்பதில் ஆச்சரியமே இல்லை.
சத்தியத்திற்காக (truth) உறுதியாக நிற்பது ஒரு அற்புதமான விஷயம். நீங்கள் அப்படி நிற்கும்போது, எதற்காகவும் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நாம் அப்படிச் செயல்படுவது எவ்வளவு ஆசீர்வாதமானது! இல்லையா?? பாவம், முதியவரான யாக்கோபு வளர்ந்து கொண்டிருக்கிறார், ஆனால் அவர் இன்னும் அந்த ஆவிக்குரிய முதிர்ச்சியை அடையவில்லை.
பிறகு, அவருடைய மகன்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இவ்வாறு பதில் சொல்கிறார்கள்:
ஆதியாகமம் 34:31
’31அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.’
…………………………
அது ஒரு நல்ல கேள்வி. அவர்கள் நீதியைத் தங்கள் கைகளில் எடுக்க நினைத்திருந்தால், முதலாவதாக அந்த இளைஞன் (சீகேம்) சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும்; மேலும் அவன் தங்கள் சகோதரியைத் திருமணம் செய்து கொள்ள அனுமதித்திருக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில் அதுதான் ஒரு சிறந்த தீர்வாக இருந்திருக்கும். ஆனால், அதற்காக அது முற்றிலும் சரியானது என்று நான் சொல்ல மாட்டேன். இருwதாலும், அந்த தேசத்து மக்களைக் கொன்று குவித்த கொடூரமான செயலை விட, இது எவ்வளவோ மேலானது.
அவர்கள் செய்த இந்தச் செயலுக்கு எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது; அவர்களுக்கு ஆதரவாகப் பேச என்னிடம் எந்தத் தற்காப்பு வாதமும் இல்லை. அவர்கள் அப்படிச் செய்திருக்கவே கூடாது. ஆனால் ஒன்று, அவர்கள் ரோமர் 12:19-21-ல் சொல்லப்பட்டுள்ள சத்தியத்தின் வெளிச்சத்தில் வாழவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்த வசனம் என்ன சொல்கிறது கவனியுங்கள். ரோமர் 12:19-21
’19பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். 20அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். 21நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.’
………………………
இன்று ஒரு கிறிஸ்தவரைப் பொறுத்தவரை, ரோமர் 12-ஆம் அதிகாரத்தில் உள்ள அறிவுரைகளே அவர் பின்பற்ற வேண்டிய கொள்கையாக (policy) இருக்க வேண்டும். நாம் எப்போது பழிவாங்கத் துடிக்கிறோமோ அல்லது வஞ்சகத்தைத் தீர்க்க முற்படுகிறோமோ, அந்த நிமிஷமே நாம் விசுவாசத்தினால் நடப்பதை நிறுத்திவிடுகிறோம். அதாவது, “தேவனால் இதைச் சரிசெய்ய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று மறைமுகமாகச் சொல்கிறோம். இருப்பினும், யாக்கோபையும்—நிச்சயமாக அவருடைய மகன்களையும்—அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு உயர்ந்த ஆவிக்குரிய நிலைக்கு (spiritual level) கொண்டு வந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
நிச்சயமாக, அவர்கள் செய்த இந்தத் பயங்கரமான செயலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. தங்கள் சகோதரிக்காக அவர்கள் கொண்ட உணர்ச்சிகளையும், அதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பழிவாங்குதல் என்ற பெயரில் அவர்கள் செய்த அந்தப் படுகொலை ஒருபோதும் நீதியாகாது.
யாக்கோபு இப்போது ஒன்றை உணரத் தொடங்கினார்: அவர் கடந்த காலத்தில் செய்த தவறுகள் அனைத்தும் இப்போது அவரிடமே திரும்பி வரத் தொடங்கிவிட்டன. “நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்” என்பதற்கு ஏற்ப, ஒரு சில சிக்கல்கள் அல்ல, ஒட்டுமொத்தப் பிரச்சினைகளும் இப்பொழுது அவரைச் சூழ்ந்து கொண்டன.
.ஆதியாகமம் 34-ஆம் அதிகாரம் ஒரு இருண்ட அதிகாரமாகத் தோன்றலாம். இதில் வன்கொடுமை, வஞ்சகம், கொலை மற்றும் பேராசை என மனிதனின் பாவ இயல்புகள் அனைத்தும் வெளிப்படுகின்றன. ஆனால், இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஆவிக்குரிய சத்தியங்கள் சில உள்ளன:
1. உலகம் நமக்கான இடமல்ல
யாக்கோபு சாலேமுக்கு அருகே நிலம் வாங்கி, அங்கேயே தங்கிவிட நினைத்தார். ஆனால், தேவன் அவரை பெத்தேலுக்கு (தேவனுடைய வீடு) அழைக்க விரும்பினார். உலகத்தோடு சமரசம் செய்து வாழ நினைக்கும் போது, நம் குடும்பங்களுக்குள் “தீனாள்” மற்றும் “சீகேம்” போன்ற பிரச்சனைகள் நுழைய வாய்ப்பு உண்டு. விசுவாசிகள் உலகத்தோடு கலக்காமல், தேவனுடைய அழைப்பில் உறுதியாக இருக்க வேண்டும்.
2. சடங்குகள் ஒருபோதும் இரட்சிப்பல்ல
சீகேமின் மனிதர்கள் ‘விருத்தசேதனம்’ செய்துகொண்டார்கள், ஆனால் அவர்கள் இதயம் மாறவில்லை. இன்று நாமும் சபை அங்கத்துவம், ஞானஸ்நானம் போன்ற சடங்குகளைச் செய்திருக்கலாம். ஆனால், கிறிஸ்துவுக்குள் ஒரு “புதிய சிருஷ்டியாக” மாறவில்லை என்றால், அந்தச் சடங்குகள் வெறும் மத வேஷமே. உண்மையான விசுவாசம் இதயத்திலிருந்து புறப்பட வேண்டும்.
3. பழிவாங்குதல் கர்த்தருக்குரியது
சிமியோனும் லேவியும் நீதியைத் தங்கள் கைகளில் எடுத்தார்கள். விளைவு? ஒரு பயங்கரமான படுகொலை. ரோமர் 12:19-ன் படி, பழிவாங்குதல் கர்த்தருக்குரியது. நாம் மற்றவர்களைப் பழிவாங்கத் துடிக்கும்போது, தேவனுடைய நீதியின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறோம். தீமையை நன்மையால் வெல்வதே ஒரு உண்மையான தேவபிள்ளையின் அடையாளம்.
4. விதைப்பும் அறுப்பும்
யாக்கோபு தன் வாழ்க்கையில் செய்த ஏமாற்று வேலைகளின் நிழல், இப்போது அவர் மகன்கள் மூலமாக அவர் முன்பே வந்து நிற்கிறது. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். யாக்கோபு என்னும் தன் பெயரைப் போல ஏமாற்றுக்காரனாக இல்லாமல், ‘இஸ்ரவேலாக’ மாற இன்னும் பல போராட்டங்களைக் கடக்க வேண்டியிருந்தது.
உங்கள் வாழ்க்கை உலகத்தோடு சமரசம் செய்துகொ ள்கிறதா அல்லது சத்தியத்திற்காகத் தனித்து நிற்கிறதா? நம்முடைய செயல் மற்றவர்களைத் திருப்திப்படுத்த அல்ல, தேவனைத் திருப்திப்படுத்தவே இருக்க வேண்டும் என்ற சத்தியத்தை ஒரு பொழுதும் நம் மறந்து போகக்கூடாது.
கர்த்தருடைய கிருபையும் சத்தியமும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என்றும் காத்துக் கொள்வதாக ஆமென்
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
